ஜூன் 30, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -81

महामुनिमनोनटी महितरम्यकम्पातटी-
कुटीरकविहारिणी कुटिलबोधसंहारिणी
सदा भवतु कामिनी सकलदेहिनां स्वामिनी
कृपातिशयकिंकरी मम विभूतये शांकरी ८१॥

மஹாமுனி மனோனடீ மஹிதரம்ய கம்பாதடீ-
குடீரக விஹாரிணீ குடிலபோ³ஸம்ஹாரிணீ
ஸதா³ வது காமினீ ஸகல தே³ஹிநாம் ஸ்வாமினீ
க்ருʼபாதிஶய கிம்கரீ மம விபூதயே ஶாம்கரீ 81

பெருமுனிவர் உள்ளத்தில் நடம்புரிபவளும், புகழ்பெற்ற அழகு கம்பைக்கரை குடிலில் வீற்றவளும், கோணலான அறிவின்மையை அழித்தவளும், அனைத்து உயிர்க்கும் அதிபதியானவளும், கருணையென்னும் பணியாளை உடையவளுமான சங்கர காந்தை எனக்கு நலமே வழங்கட்டும்.

பெருமுனி வோருள்ளில் பேறாய் நடம்செயும், பேச்சுறுமேர்
இருகம்பைக் கோட்டம் இருப்பிடம் ஈண்டும், இழுதைபின்னம்
கருக்கிடும், எல்லா கருவின் கடவளும், காருணிய
விருத்தியன் கொண்டநல் வேதியன் தேவி! விரைநலமே!

பெருமுனிவோர்-மஹாமுனிவர்; பேறு-பாக்கியம்; பேச்சு-புகழ்; ஏர்-அழகு; இரு-பெரிய; கோட்டம்-கரை; இருப்பிடம்-குடில்; ஈண்டும்-சேரும்; இழுதை-அறிவின்மை; பின்னம்-கோணல்; கருக்கு-அழி; கரு-உயிர்; கடவள்-அதிபதி; விருத்தியன்-வேலையாள்; நல்வேதியன்-சிவன்; விரை-விரைந்து தருக

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


பெருமுனிவோர் உள்ளில் பேறாய் நடம்செயும், பேச்சு உறும் ஏர் இரு கம்பைக் கோட்டம் இருப்பிடம் ஈண்டும், இழுதை பின்னம் கருக்கிடும், எல்லா கருவின் கடவளும், காருணிய விருத்தியன் கொண்ட நல்வேதியன் தேவி விரை நலமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...