மார்ச் 10, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 70

श्रोणीचञ्चलमेखलामुखरितं लीलागतं मन्थरं
भ्रूवल्लीचलनं कटाक्षवलनं मन्दाक्षवीक्षाचणम्
यद्वैदग्ध्यमुखेन मन्मथरिपुं संमोहयन्त्यञ्जसा
श्रीकामाक्षि तव स्मिताय सततं तस्मै नमस्कुर्महे ७०॥

ஶ்ரோணீ சஞ்சல மேக²லா முக²ரிதம் லீலாக³தம் மந்த²ரம்
ப்ரூவல்லீ சலனம் கடாக்ஷ வலனம் மந்தா³க்ஷ வீக்ஷாசணம்
யத்³வைத³க்³த்ய முகே² மன்ம த²ரிபும் ஸம்மோஹயந்த்யஞ்ஜஸா
ஸ்ரீகாமாக்ஷி! தவ ஸ்மிதாய ஸததம் தஸ்மை நமஸ்குர்மஹே 70

ஸ்ரீகாமாக்ஷி! இடையில் அசையும் ஒட்டியாண ஒலியுடன் கூடிய மென்னழகு நடையும், புருவக்கொடிகளின் அசைவும், நாணத்துடன் காணுந் திறனுடைத்த கடைக்கண் வீச்சும், எப்புன்னகைத் திறனால் மாரவைரியாரை எளிதில் தம்பால் மோகம் கொள்ளச் செய்கின்றனவோ, அந்த உன்றன் மென்னகையை எப்போதும் வணங்குகிறோம்.

இடையசை மேகலை இன்னிமிழ் கூடுமென் ஏர்மிகுந்த
நடையும்,  அசைநுதற் நாம்பும்,  திறனொடு நாணமாய்காண்
கடைவிழி வீச்சோடு, காமன் பகைவர்மோ கம்கொளவும்
உடைநகை காமாட்சீ ஒற்றித் தலைநாளும் ஒன்றினமே

மேகலை-ஒட்டியாணம்; இமிழ்-ஒலி; ஏர்-அழகு; நுதல்-புருவம்; நாம்பு-கொடி; காமன் பகைவர்-சிவபிரான்; ஒற்றி-பதித்து; ஒன்றி-இணைந்தோமே!

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


இடையசை மேகலை இன்னிமிழ் கூடுமென் ஏர் மிகுந்த நடையும்,  அசைநு தற் நாம்பும்,  திறனொடு நாணமாய் காண் கடைவிழி வீச்சோடு, காமன் பகைவர் மோகம் கொளவும் உடை நகை காமாட்சீ ஒற்றித் தலைநாளும் ஒன்றினமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...