कार्पण्यपूरपरिवर्धितमम्ब मोह-
कन्दोद्गतं भवमयं विषपादपं मे ।
तुङ्गं छिनत्तु तुहिनाद्रिसुते भवत्याः
काञ्चीपुरेश्वरि कटाक्षकुठारधारा ॥65॥
கார்பண்ய பூர ரஸ வர்திதமம்ப மோஹ-
கந்தோத்கதம் பவமயம் விஷபாதபம் மே |
துங்கம் சினத்து துஹினாத்ரிஸுதே பவத்யா:
காஞ்சீபுரேஶ்வரி கடாக்ஷ குடார
தாரா
||65||
காஞ்சிபுரத்தின் ராணியே! இமவான் மகளே!
உனது கடைக்கண்ணாம் கோடாலியின் (மழு/பரசு) கூர் முனையானது ஏழ்மையென்னும் நீரால் வளர்ந்ததாயும், மோகமென்னும்
வித்திலிருந்து வெளிவந்ததுமான இவ்வாழ்வெனும் விஷ விருட்சத்தை வெட்டி எறியட்டுமே!
இமவான் மகளே இணையிலா காஞ்சி எழிலரசீ!
உமது மழுபோல் ஒளிர்கடைக் கண்ணதன் ஊசியது
எமது வறுமை எனும்நீரால் ஓங்கி இரைப்புவித்தில்
குமிழ்த்தயிவ் வாழ்வாம் கொடுவி டமரத்தை கொல்கிறதே!
மழு-கோடரி; ஊசி-கூர்மை; ஓங்கி-வளர்ந்து;
இரைப்பு-மோகம்; வித்து; குமிழ்த்தல்- கொப்புளித்து வருதல்; கொல் - அழித்தல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam