ஜூன் 15, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 5

साहाय्यकं गतवती मुहुरर्जुनस्य
मन्दस्मितस्य परितोषितभीमचेताः   
कामाक्षि पाण्डवचमूरिव तावकीना
कर्णान्तिकं चलति हन्त कटाक्षलक्ष्मीः 5

ஸாஹாய்யகம் கதவதீ முஹுரர்ஜுனஸ்ய
மன்தஸ்மிதஸ்ய பரிதோஷித பீமசேதா: |
காமாக்ஷி பாண்டவ சமூரிவ தாவகீனா
கர்ணாந்திகம் சலதி ஹந்த கடாக்ஷலக்ஷ்மீ: ||5||

காமாக்ஷியே உன்னுடைய கடைக்கண் பார்வையாம் திருமகளானது, வெண்மையான புன்சிரிப்பாகும் அருச்சுனனுக்கு உதவுவதற்காக, பீமனெனும் சிவனின் மனத்தை மகிழ்விக்கச் செய்வதற்காக, பாண்டவ (ஐவரது) சேனைபோல் கர்ணனாகிய காதருகே செல்கிறது. அர்ஜுனம் என்றால் வெண்மையென்றாகும்; பீமசங்கர் என்பது ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று; கர்ணம் என்பது காதையும், பாண்டவர்களின் வைரியான கர்ணனையும் குறிக்கும்; பாண்டவ சேனை கர்ணன் அருகே செல்வதுபோல், கடைக்கண், காதருகே நீள்கிறதாம்.

காமாட்சீ! உந்தன் கடைவிழிப் பார்வை கமலையவள்
சோமன் நிறம்பூத்த சுந்தரப் புன்னகை சூடுபார்த்தன்
தாமொடு பீமனாம் சங்கரன் உள்ளமுந் தான்மகிழ
காமுற்று ஐவர் கடகம்போல் செல்லும் கதிர்மகற்கே!

கமலை - திருமகள்; சோம நிறம் - வெண்மை; காமுற்று - விரும்பி; ஐவர் - பாண்டவர்; கடகம் - படை; கதிர்மகன் - சூரியனின் செல்வன் கர்ணன் (கர்ணம் - காது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...