अस्तं क्षणान्नयतु मे परितापसूर्यम्
आनन्दचन्द्रमसमानयतां प्रकाशम् ।
कालान्धकारसुषुमां कलयन्दिगन्ते
कामाक्षि कोमलकटाक्षनिशागमस्ते ॥6॥
அஸ்தம் க்ஷணான்னயது மே பரிதாபஸூர்யம்
ஆனந்த சந்த்ரமஸம் ஆனயதாம் ப்ரகாஶம் |
காலான்தகார ஸுஷுமாம் கலயன் திகந்தே
காமாக்ஷி கோமல கடாக்ஷ நிஶாகமஸ்தே ||6||
காமாட்சி தாயே! உன்னுடைய அழகிய
கடைக்கண் பார்வையாம் மாலையின் வருகை அனைத்து திசைகளிலும் காரிருளாம் அழகைப் பரப்பி,
என்னுடைய உள்ளத்தில் துன்பமாகிய வெப்பத்தை ஒரு கணத்தில் மறையச் செய்யட்டும்; மகிழ்வாம்
சந்திரனை வெளிச்சமாகக் கொணரட்டும்.
உன்னொண் கடைக்கண் ஒளியாம்பொன் மாலை உவந்துவந்து
கன்னங் கரியதாம் கங்குல் அழகின் கதிர்பரப்பி
என்னுளத் துன்பாய் எரியு மனலும் இலைகணத்தில்
என்றாகத் தண்ணளி இந்தின் ஒளியினை ஈயட்டுமே
ஒண்- அழகு; கங்குல் - காரிருள்; இந்து- சந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam