மே 27, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 87

प्रणतजनतापवर्गा कृतबहुसर्गा ससिंहसंसर्गा
कामाक्षि मुदितभर्गा हतरिपुवर्गा त्वमेव सा दुर्गा 87

ப்ரணத ஜனதாபவர்கா க்ருதபஹுஸர்கா ஸஸிம்ஹ ஸம்ஸர்கா |
காமாக்ஷி முதித பர்கா ஹதரிபுவர்கா த்வமேவ ஸா துர்கா ||87||

காமாட்சியே! தன்னை வணங்குபவர்களுக்கு முத்தியளிப்பவளும், பலவுயிரினங்களையும் படைத்தவளும், சிங்கத்துடன் இருப்பவளும், பரமசிவனை மகிழ்விப்பளும், பகைவரை அழிப்பவளுமான துர்கை வடிவினளும் நீதான்! “பஹீஸர்கா” விற்கு மாற்றாக,  “ரணசர்கா” என்றும் பாடமுண்டு. அது “போரில் விருப்பமுள்ளவள்” என்றாகும். அம்பிகை போர் புரிவது தீமையை ஒழிக்கமட்டுமே! போரில் விருப்பமுள்ளவள் என்பது சற்று பொருந்தாதவொன்றே!

வணங்கிடு மன்பர்க்கு வானுறை முக்தி வழங்கிடுவாய்;
கணக்கில் உயிர்களும் காமாட் சியுன்படைப்பே! கான்சிங்கம்
இணங்கி உடனே இருக்கும்; மகிழ்விப்பாய் ஈசனையும்;
அணங்கே பகையழி அன்னைதுர்கை யும்நீ அறிந்தோமே

மே 26, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 86

शुकिनी गीते कौतुकिनी परिसरे गायकिनी
जयसि सविधे‌உम्ब भैरवमण्डलिनी श्रवसि शङ्खकुन्डलिनी 86

அங்கே ஶுகினீ கீதே கௌதுகினீ பரிஸரே ச காயகினீ |
ஜயஸி ஸவிதேςம்ப பைரவ மண்டலினீ ஶ்ரவஸி ங்க குண்டலினீ ||86||

கையில் கிளியை வைத்திருப்பவளாகவும், இசையில் ஆர்வமுள்ளவளாகவும், இசைப்பவர்களால் சூழ்ந்திருக்கப்பட்டவளும், பைரவ கணங்களால் சுற்றிவரப்படுவளும், சங்கினாலாகிய குண்டலங்களையுடையவளுமான தாயே, நீ வெற்றி மகிழ்வுடனிருக்கிறாய்

சுகத்தை கரத்தில் சுமப்பாய்! இசையாம் சுகத்தில்தாயே
மிகவிருப் பாயிசை மிக்கிசைப்போர் சூழ மிளிர்கின்றாய்!
மகத்தென பைரவ மண்டலங்கள் கொண்டு மகிழ்வோடே
உகந்துன் செவிகளில் ஊரிக் குழைகளை உற்றவளே


சுகம் - கிளி; ஊரி - சங்கு

மே 25, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 85

मदजलतमालपत्रा वसनितपत्रा करादृतखानित्रा
विहरति पुलिन्दयोषा गुञ्जाभूषा फणीन्द्रकृतवेषा 85

மதஜல தமால பத்ரா வஸனித பத்ரா கராத்ருத கனித்ரா |
விஹரதி புலிந்தயோஷா குஞ்ஜாபூஷா பணீந்த்ர க்ருதவேஷா ||85||

யானையின் மதநீரும் பச்சிலையும் குழைத்துத் திலகமிட்டவளும், இலைகளையே ஆடையாக தரித்தவளும், மண்வெட்டியைக் கையில் கொண்டவளும், குந்துமணி மாலை பூண்டவளும், பாம்புகளை அணியாகப் பூண்டவளுமாக வேடுவப் பெண்ணாய் தேவீ (காமாட்சி) விளையாடிக் கொண்டிருக்கிறாள். இதில் அர்சுனனின் தவவலியை மெச்சி பாசுபதாஸ்திரத்தை தருவதற்காக அப்பனும் அம்மையும், வேடுவ ஆண், பெண்ணாகப் வேடம் புனைந்து அவ்வேடங்களுக்குரிய சின்னங்களோடு வந்தபோது, தேவி எப்படியிருந்தாளோ, அதை வருணிக்கிறார் மூககவி.

மதநீ ரொடுகுழை மட்டிலைப் பொட்டிடுவாள் மாவேடச்
சிதழையா டைதன்னைச் சீராய் தரிப்பாளாம்; செங்கையில்மண்
சிதைத்தகழ் வெட்டியாள்; செங்குன்றி மாலைச் சிகழிகையாள்
அதமாய் அரவாம் அணிபூண்ட வள்கேளி ஆடுவளே


மட்டிலை - பச்சிலை; தழை - இலை; அதமாய் - இணையற்று; சிகழிகையாள் - சிரஞ்சுற்றி அணிந்தவள்

மே 24, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 84

दग्धमदनस्य शम्भोः प्रथीयसीं ब्रह्मचर्यवैदग्धीम्
तव देवि तरुणिमश्रीचतुरिमपाको चक्षमे मातः 84
தக்த மதனஸ்ய சம்போ: ப்ரதீயஸீம் ப்ரஹ்மசர்ய வைதக்தீம் |
தவ தேவி தருணிமஸ்ரீ சதுரிம பாகோ சக்ஷமே மாத: ||84||

தேவி! மன்மதனை எரித்தவராம் சம்புவின் சிறப்பாகப் பேசப்படும் பிரமச்சரிய நிலையின் பெருமையை உன்னுடைய இளமை அழகின் திறமையானது பொறுத்துக் கொள்ளவில்லை, அம்மையே!

மாரனை நீறெனச்செய் மாதேவ சம்புவார் மாண்புற்ற
சீராம் புலன்களைச் செற்ற பெருமைச் சிறப்பினாலுன்
பேரிள மையெழில் பேற்றின் திறனுக்குப் பீழையங்கு
நேருதல் ஏனோ நெறியோதா யேதேவி நேரிழையே

பீழை - துன்பம், வருத்தம்

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...