நவம்பர் 26, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 68

धुनानं पङ्कौघं परमसुलभं कण्टककुलैः
विकासव्यासङ्गं विदधदपराधीनमनिशम्
नखेन्दुज्योत्स्नाभिर्विशदरुचि कामाक्षि नितराम्
असामान्यं मन्ये सरसिजमिदं ते पदयुगम् ६८॥

துனானம் பங்கௌகம் பரம-ஸுலபம் கண்டக-குலை:
விகாஸ-வ்யாஸங்க³ம் வித³³பராதீனமனிம்
நகே²ந்து³ ஜ்யோத்ஸ்னாபிர் வி³ ருசி காமாக்ஷி! நிதராம்
அஸாமான்யம் மன்யே ஸரஸிஜமித³ம் தே பத³யுக³ம் 68

காமாக்ஷி! உன்னிரு கழல்களை தாமரைகள் என்று சொன்னாலும், அவை முற்றிலும் மாறுபட்ட, ஒப்பில்லாதவையே என்று நினைக்கிறேன். அவை பாவச் சேற்றில் உறைவதில்லை; மாறாக நீக்குகின்றன. முட்கூட்டங்களாம் தீயவர்கள் அண்டவே முடியதாவை; யார் துணையுமில்லாமல் (சூரியனின்) எப்போதும் மலர்ந்திருப்பவை; வெண்மையான நகங்களெனும் சந்திரனால் ஒளியுற்றவை! மாறாக, தாமரை மலரோ சேற்றில் பூக்கிறது; தண்டிலும் முட்கள் உண்டு; சூரியனைக் கண்டே மலரும்; நிலவைக் கண்டு கூம்பிவிடும்.

உன்னீர் கழலும் உறையாபா வச்சேற்றில்! ஊனமுட்கள்
உன்னை யணுகவே ஒண்ணா! துணையாய் ஒருவரின்றி
உன்கழ லூழ்க்கும்! உகிராம் நிலவால் ஒளியுறுமாம்!
உன்னடி கட்கென்றும் ஒப்பில்லை காமாட்சீ ஒண்மரையே!


ஈர்கழல்- இருபாதம்; ஊன-தீய; ஊழ்க்கும்-மலரும்; உகிர்-நகம்; ஒண்மரை- ஒளிமிக்க தாமரை;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...