छायाभरणे जगतां परितापहारी
ताटङ्करत्नमणितल्लजपल्लवश्रीः ।
कारुण्यनाम विकिरन्मकरन्दजालं
कामाक्षि राजति कटाक्षसुरद्रुमस्ते ॥8॥
சாயாபரணே ஜகதாம் பரிதாபஹாரீ
தாடங்கரத்ன மணிதல்லஜ பல்லவஸ்ரீ: |
காருண்ய நாம விகிரன் மகரந்தஜாலம்
காமாக்ஷி ராஜதி கடாக்ஷ ஸுரத்ருமஸ்தே ||8||
அன்னையே காமாக்ஷி! உன் கடைக்கண்ணாகிய
கற்பக விருட்சம், தன் நிழலால் உலகோரின் கானலைப் போக்குகிறது! உன்னுடைய காதணியும் தோடுகளின்
இரத்தின ஒளிக்கதிர்களே அவ்விருட்சத்தின் துளிர்கள்; அவ்விருட்சம் கருணையென்னும் மகரந்தத்
துகள்களை எங்கும் வாரி இறைப்பதாக உள்ளது!
கற்பக மாகுமாம் காமாட்சீ யுன்கடைக்
கண்ணிழல்தாம்
அற்றிடச் செய்யும் அகிலத்தின்
தாப அனலதனை!
கற்றோடு வீசும் கதிராம் துளிருடை
காத்தருவே,
வற்றாக் கருணை மலர்வீ இறைக்குமே
வாரியங்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam